Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 1.47 லட்சம் குழந்தைகள்

ஜனவரி 17, 2022 12:43

புதுடெல்லி: கொரோனா உள்ளிட்ட நோய்களால் 2020 முதல், 1.47 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:நாட்டில் கொரோனா தொற்று 2020 மார்ச்சில் பரவத் துவங்கியது. 2020 ஏப்ரல் முதல் தற்போது வரை, கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய்களால் 1.47 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள், தாயையோ, தந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளனர்.

இதில் 76 ஆயிரத்து 508 பேர் சிறுவர்கள்; 70 ஆயிரத்து 980 பேர் சிறுமியர். நான்கு பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். ஒடிசா மாநிலத்தில் தான் அதிகபட்சமாக 24 ஆயிரத்து 405 குழந்தைகள் பெற்றோரை இழந்துஉள்ளனர். மஹாராஷ்டிராவில் 19 ஆயித்து 623 குழந்தைகளும், குஜராத்தில் 14 ஆயிரத்து 770 குழந்தைகளும், தமிழகத்தில் 11 ஆயிரத்து 14 பேரும் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளனர்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்